Verse 25:
தூநறு மலர்தர ளம்பொரி
தூவிமுன் இருபுடை யின்கணும்
நான்மறை முனிவர்கள் மங்கல
நாமநன் மொழிகள் விளம்பிட
மேனிறை நிழல்செய வெண்குடை
வீசிய கவரி மருங்குற
வானவர் தலைவரும் நண்பரும்
மாளிகை நடுவு புகுந்தனர்.
தூய மணமுடைய மலர்களையும், முத்துக்களையும் பொரிகளையும் தூவி, முன் இரு பக்கங்களிலும் நான்மறைகளில் வல்ல முனிவர்கள் மங்கலமுடைய நல்ல சொற்களைச் சொல்ல, மேலே வெண்கொற்றக் குடை, நிறைந்த நிழல் பரப்ப, வெண் சாமரைகள் இருமருங்கும் வீசப்பட, சேரமானும் நம்பியாரூரரும் அரண்மனை யின் நடுவே புகுந்தனர்.
Arunachala Siva.